TNPSC Thervupettagam

தாய்ப்பால் ஊட்டும் நிலை குறித்த அறிக்கை

August 12 , 2019 2087 days 734 0
  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷவர்தன் தாய்ப்பால் ஊட்டும் நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டார்.
  • நாட்டில் கைக் குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்டும் நடைமுறையில் மணிப்பூர் மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
  • உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகியவை இந்தப் பட்டியலின் கடைநிலையில் உள்ளன.
  • தேசியத் தலைநகரான டெல்லியும் மிக மோசமான நிலையில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக உள்ளது.
  • பின்வரும் மூன்று குறிகாட்டிகளின் அடிப்படையிலான கூட்டு மதிப்பெண்களை வகுப்பதன் மூலம் இந்த தாய்ப்பாலூட்டும் நிலை குறித்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
    • தாய்ப்பாலூட்ட ஆரம்பத்திலேயேத் தொடங்குதல்
    • ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே அளித்தல்
    • 6-8 மாத குழந்தைகளுக்கு கூடுதலாக உணவளித்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்