முகலாய இளவரசரான தாரா ஷிக்கோவின் கல்லறையைக் கண்டுபிடிப்பதற்காக சமீபத்தில் மத்திய கலாச்சாரத் துறை அமைச்சகமானது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தைச் சேர்ந்த (Archaeological Survey of India - ASI) ஏழு பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
தாரா ஷிக்கோ (1615-59) என்பவர் முகலாயப் பேரரசரான ஷாஜகானின் மூத்த மகனும் வாரிசும் ஆவார்.
இவர், இவரது தம்பியான இளவரசர் முஹியுதீன் (பின்னர் பேரரசர் ஔரங்கசீப்) என்பவரால் தோற்கடிக்கப் பட்டார்.
தாரா ஷிக்கோ ஒரு "தாராளவாத முஸ்லீம்" என்று விவரிக்கப்படுகின்றார். இவர் இந்து மற்றும் இஸ்லாமிய மரபுகளுக்கு இடையில் இருக்கும் பொதுவான தன்மைகளைக் கண்டறிய முயன்றார்.
இவர் பகவத் கீதை மற்றும் 52 உபநிடதங்களை பாரசீக மொழியில் மொழிபெயர்த்தார்.