TNPSC Thervupettagam

தார் பாலைவனப் பசுமையாக்கம்

April 14 , 2025 5 days 82 0
  • இந்தியாவில் உள்ள தார் பாலைவனத்தின் பசுமையாக்கத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஆண்டுதோறும் 38 சதவீத உயர்வுப் பதிவாகியுள்ளது.
  • பருவமழை மற்றும் வேளாண் விரிவாக்கத்தில் பதிவான குறிப்பிடத்தக்க அதிகரிப்பே இதற்குக் காரணமாகும்.
  • நிலத்தடி நீர் வளங்களும் தார் பாலைவனத்தின் தாவர வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
  • கடந்த சில தசாப்தங்களில் மக்கள் தொகை, மழைப்பொழிவு மற்றும் தாவரங்களில் ஒரே நேரத்தில் அதிகரிப்பு பதிவான உலகின் ஒரே பாலைவனம் தார் பாலைவனம் ஆகும்.
  • தார் பாலைவனப் பகுதியானது, உலகின் மிக அதிகமான மக்கள் தொகை அடர்த்தி கொண்ட பாலைவனத்தைக் கொண்டுள்ளது.
  • இது வடமேற்கு இந்தியா (இராஜஸ்தான், குஜராத், பஞ்சாப் மற்றும் ஹரியானா) மற்றும் தென்கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் 200,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரவி உள்ளது.
  • 2001 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் பாலைவனத்தில் பதிவான மழைப் பொழிவு 64 சதவீதம் அதிகரித்துள்ளது.
  • 1985 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் தார் பாலைவனத்தில் நகர்ப்புறங்களில் 50 சதவீதம் முதல் 800 சதவீதம் வரை அதிகரிப்பு என்பது பதிவானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்