தாவர இலைகள் காற்றில் இருந்து நேரடியாக சிறு நெகிழித் துண்டுகள் (Microplastics) மற்றும் நுண் நெகிழிகளை உறிஞ்சுகின்றன.
இந்தத் துகள்கள் ஆனது, பின்னர் மனிதர்களால் உட்கொள்ளப்படும் தாவர வகைகள் மற்றும் பயிர்கள் மூலம் உணவுச் சங்கிலியில் நுழைகின்றன.
சிறு நெகிழிகள் என்பது சுமார் 5 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட நெகிழித் துகள்கள் என வரையறுக்கப்படுகிறது அதே நேரத்தில் நுண்நெகிழிகள் (Nano plastics) ஆனது 1,000 நானோ மீட்டருக்கும் குறைவான அளவிற்கு சிறியவையாகும்.
இலைத் துளைகள் என்பது சிறப்புச் செல்களால் உருவாக்கப்பட்ட சிறிய துளைகள் ஆகும்.
புறத்தோல் என்பது மெழுகால் பூசப்பட்ட ஒரு பாதுகாப்புச் சவ்வு ஆகும் என்பதோடு, இது நுண் நெகிழிகளை உறிஞ்சுவதற்கு குறிப்பாக உகந்ததாக அமைகிறது.