TNPSC Thervupettagam

திடக்கழிவு மேலாண்மையில் முன்மாதிரி நகரப் பஞ்சாயத்து

May 9 , 2023 439 days 247 0
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள கருங்குழி நகரப் பஞ்சாயத்து ஆனது, திடக்கழிவு மேலாண்மையில் ஒரு முன்மாதிரியான நகரப் பஞ்சாயத்து என்ற அங்கீகாரத்தினைப் பெற்றுள்ளது.
  • குடிமக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தச் செய்யும் வகையில், திடக்கழிவு மேலாண்மையில் ஒரு சிறந்த நடைமுறையினை மேற்கொள்வதற்காக வேண்டி இந்த நகரப் பஞ்சாயத்து தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • இந்த நகரப் பஞ்சாயத்து ஆனது, பல்வேறு கரிமக் கழிவுகளில் இருந்து மாதந்தோறும் 4,000 முதல் 5,000 கிலோ வரை உரத்தினை உற்பத்தி செய்துள்ளது.
  • மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவு நீரானது, சாலையோர மரங்கள், மியாவாக்கி காடுகள் மற்றும் பஞ்சாயத்து நிர்வாகத்தினால் பராமரிக்கப்படும் பல்வேறு பிற தாவரங்களுக்கு பயன்படுத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்