மகாத்மா காந்தி அவர்களின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 30 அன்று தியாகிகள் தினம் (அ) சாகித் திவாஸ் அனுசரிக்கப்படுகிறது.
1948 ஆம் ஆண்டில் டெல்லியின் பிர்லா இல்லத்தில் உள்ள காந்தி ஸ்மிருதி எனுமிடத்தில் நாதுராம் கோட்சேவினால் மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த ஆண்டு தேசம் 74வது தியாகிகள் தினத்தினை அனுசரிக்கின்றது.
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
பகத்சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தாப்பர் ஆகியோருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மார்ச் 23 அன்றும் இந்தியாவில் தியாகிகள் தினம் அனுசரிக்கப் படுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அவர்கள் மூவரும் 1931 ஆம் ஆண்டின் இதே தினத்தில் தூக்கிலிடப்பட்டனர்.