TNPSC Thervupettagam

தியோதர் டிராபி 2018

March 15 , 2018 2318 days 778 0
  • தர்மசாலாவில் உள்ள இமாச்சலப் பிரதேச மாநில    கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற     45-வது தியோதர் டிராபி-2018  கிரிக்கெட் போட்டியின் இறுதி  ஆட்டத்தில் கர்நாடக அணியை  6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா-பி அணி தியோதர் டிராபியை வென்றுள்ளது.

தியோதர் டிராபி

  • இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் அட்டவணை A வகை கிரிக்கெட் போட்டியே (List A cricket competition) தியோதர் டிராபி ஆகும்.
  • இந்திய கிரிக்கெட்டின் முதுபெரும் மனிதர் (Grand Old man of Indian Cricket) என்றழைக்கப்படும்B.தியோதர் பெயர் கொண்டு இப்போட்டிக்கு தியோதர் டிராபி எனப் பெயரிடப்பட்டது.
  • வட மண்டலம், தென் மண்டலம், கிழக்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம் என நாட்டின் 5 மண்டல அணிகளுக்கு இடையே இந்த 50 ஓவர் நாக் அவுட் (knockout) கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றது.
  • 2015-16 ஆம் ஆண்டிற்கான சீசனில் தியோதார் டிராபியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது.
  • BCCI-ஐ ஆல்   தேர்ந்தெடுக்கப்படும் விஜய் ஹசாரே கோப்பையின் இரு வெற்றியாளர் அணிகளான இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் தியோதர் கோப்பையில் பங்கேற்குமாறு மாற்றியமைக்கப்பட்டது.
  • வடக்கு மண்டல அணி இதுவரை 13 முறை தியோதர் டிராபியை வென்று அதிகமுறை தியோதர் டிராபியை வென்ற அணியாக சாதனை புரிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்