TNPSC Thervupettagam

திரிபுரா - மாநிலப் பழம்

June 18 , 2018 2224 days 685 0
  • இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் திரிபுராவின் ராணி வகை அன்னாசிப் பழத்தை (Queen variety pineapple) திரிபுராவின்  மாநிலப் பழமாக அறிவித்துள்ளார்.
  • ராணி அன்னாசிப் பழமானது முள்ளுடைய (spiny) தங்க மஞ்சள் (golden yellow) நிறமுடைய  அன்னாசிப் பழமாகும். இது இனிமையான வாசமும், நறுமணச் சுவையும் கொண்டது.
  • வடகிழக்கு பிராந்திய வேளாண் சந்தைப்படுத்துதல் கழகம் (North Eastern Regional Agricultural Marketing Corporation) எனும்  மத்திய பொதுத் துறை நிறுவனத்தின் உதவியின் மூலம் இந்த அன்னாசிப் பழமானது 2015 ஆம் ஆண்டு  புவிசார் குறியீட்டைப் (Geographical Indication-GI) பெற்றது.
  • மேலும் குடியரசுத் தலைவர் திரிபுரா மாநிலத்தின் கோமதி மாவட்டத்தின் உதய்பூரில் உள்ள மாதா திரிபுரசுந்தரி ஆலயத்திலிருந்து தெற்கு திரிபுராவின் சப்ரூம் வரை, 73.71 கி.மீ. நீளமுடைய  தேசிய நெடுஞ்சாலை-8-னுடைய  பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • இந்த தேசிய நெடுஞ்சாலை - 8 ஆனது திரிபுரா மாநிலத்தை அஸ்ஸாம், மேகாலயா வழியாக நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்