தில்லி மாநில அரசால் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வினால் தேசிய தலைநகர்ப் பகுதியில் சுமார் 55 லட்சம் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பயனடைய இருக்கின்றனர்.
சமீபத்திய அறிவிப்பின் படி, திறன் பெறாத தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ 14,842 ஊதியத்தையும் பகுதித் திறன் பெற்ற தொழிலாளர்கள் மாதத்திற்கு ரூ 16,341 ஊதியத்தையும் திறன் பெற்ற தொழிலாளர்கள் ரூ 17,991 ஊதியத்தையும் தற்போது பெற இருக்கின்றனர்.
மேலும் சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தினாலும் இதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.
தில்லியின் குறைந்தபட்ச ஊதியமானது தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை விட மூன்று மடங்கு அதிகம் ஆகும்.
தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ 4,628 ஆக இருக்கின்றது. தில்லியில் இது மாதத்திற்கு ரூ 14,842 ஆக உள்ளது.