TNPSC Thervupettagam

திவிப்ரா தேசிய விடுதலை முன்னணி – திரிபுரா

August 11 , 2019 1807 days 746 0
  • இந்திய அரசு, திரிபுரா மாநில அரசு மற்றும் திரிபுராவில் தடை செய்யப்பட்ட கிளர்ச்சிக் குழுவான சமீர் குமார் தேவ் வர்மா தலைமையிலான திவிப்ரா தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front of Twipra - NLFT-SD) ஆகியவற்றிற்கிடையே அமைதி ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.
  • இந்த ஒப்பந்தத்தின்படி NLFT-SD ஆனது வன்முறையைக் கைவிட்டு தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளது.
  • NLFT ஆனது 1997 ஆம் ஆண்டு முதல் சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் வடகிழக்கில் சரணடைந்த “கிளர்ச்சியாளர்களுக்கான மறுவாழ்வுத் திட்டம், 2018”ன் படி சரணடைந்த கிளர்ச்சியாளர்களுக்கு சரணடைந்ததற்கான பயன்கள் வழங்கப் படவிருக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்