ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர் கலா கேந்திரா என்னுமிடத்தில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தினால் திவ்ய கலா மேளா ஏற்பாடு செய்யப் பட்டு உள்ளது.
திவ்யாங்ஜன்களால் (மாற்றுத் திறனாளிகளால் செய்யப்படும்) தயாரிப்புகளின் திறன் மற்றும் கைவினைத் திறனைப் பெருமளவில் நன்கு மேம்படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது திவ்யாங்ஜன்களுக்கு அதிகாரமளிப்பதற்காக என்று மட்டுமல்லாமல், இந்தியக் கலைகள் மற்றும் கைவினைப் பொருட்களைப் பரப்பும் ஒரு நோக்கிலும் நடத்தப் படுகின்றது.