திவ்யாங் பிரிவினருக்கான (மாற்றுத் திறனாளிகள்) தனி அரசுத் துறையை உருவாக்குவதற்கு மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளுக்கென தனித் துறையை அமைத்த முதல் மாநிலம் மகாராஷ்டிரா ஆகும்.
அந்த மாநிலத்தில் உள்ள உடல் மற்றும் மனநலம் குன்றியவர்களுக்கு கல்வி மற்றும் தொழில் ரீதியான சேவைகளை வழங்குவதற்காக இத்துறை நிறுவப்பட்டுள்ளது.
திவ்யாங் பிரிவினரின் நலனை உறுதிப்படுத்துவதையும், அவர்களை பயனர் இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்படும் பல்வேறு அரசு திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.