தீபா மாலிக் என்பவர் நியூசிலாந்து பிரதம அமைச்சரின் “2019 ஆம் ஆண்டிற்கான சர் எட்மண்டு ஹில்லாரி தோழமை விருதைப்” பெறுபவராக பெயரிடப்பட்டுள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கத்தை வென்ற முதலாவது இந்தியப் பெண் இவராவார்.
இவர் 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இவர் 58 தேசிய விருதுகள் மற்றும் 23 சர்வதேச விருதுகள் உள்பட பத்மஸ்ரீ மற்றும் அர்ஜூனா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.
இந்த தோழமைத் திட்டமானது இரு நாடுகளுக்கிடையேயான நட்பை வெளிப்படுத்துவதன் மூலம் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் 2008 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றது.