அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேலும், இயல்பை விட குறைந்த பட்சமாக 4.5 புள்ளிகள் அதிகமாக இருக்கும் போதும் வெப்பக்காற்று வீசுவதாக அறிவிக்கப் படுகிறது.
கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் வடமேற்கு இந்தியாவில் ஏப்ரல் மாதம் அதிக வெப்ப நிலை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் பெரும் பகுதிகளில் 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பநிலை அதிகரித்ததால், வழக்கத்திற்கு மாறாக மிக வெப்பமான ஏப்ரல் மாதமாகவும் இது மாறியுள்ளது.
ஏப்ரல் 27 ஆம் தேதி வரை சராசரி அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ் ஆகும்.
இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த மாதத்தில் பதிவாகாத அதிகபட்ச வெப்ப நிலை ஆகும்.
முழு அளவில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலைகளின் அடிப்படையில், ஒரு புவிப் பரப்பில் அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் போது வெப்பக் காற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை 47 டிகிரியைத் தாண்டினால் கடுமையான வெப்பக்காற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப் படும்.