கோல்டி சோலார் என்ற நிறுவனமானது, ஸ்ரீராமகிருஷ்ணா அறிவு அறக்கட்டளையுடன் இணைந்து தெற்கு குஜராத்திலுள்ள துதாலா என்ற ஒரு கிராமத்தினை சூரிய சக்தி மயமாக்கும் ஒரு திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டியுள்ளது.
450 Kw திறனுள்ள சூரியசக்தி கூரைத்தகடுகள் அமைக்கும் இத்திட்டமானது சுமார் 350 வீடுகளிலும் அங்கன்வாடிகள் மற்றும் கிராமப் பஞ்சாயத்து போன்ற சில பொது இடங்களிலும் ஆற்றல் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்படும்.
இது நிறைவடைந்தால் இந்த அறக்கட்டளையினால் வழங்கப்பட்ட சூரிய மின் தகடுகள் மூலம் முழுவதும் ஆற்றல் வழங்கப்பட்ட முதல் கிராமமாக இது மாறும்.