மத்தியப் பிரதேச வனவிலங்கு வாரியமானது, பன்னா புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளுக்காக ஒரு புதிய காப்பகத்தினை நிறுவுவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2,339 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்ட இந்தப் புதிய புலிகள் காப்பகம் ஆனது, துர்காவதி புலிகள் காப்பகம் என்று அழைக்கப்படும்.
இது நரிசிங்பூர், தாமோ மற்றும் சாகர் ஆகிய மாவட்டங்களில் பரவிக் காணப்படும்.
புலிகள் அந்தப் புதியக் காப்பகத்திற்கு இயற்கையாக இடம் பெயரச் செய்வதற்காக துர்காவதியுடன் பன்னா புலிகள் காப்பகத்தினை இணைக்கும் பசுமை வழிச்சாலை ஒன்று உருவாக்கப் படும்.