இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் கல்வெட்டியல் துறையானது தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருத கல்வெட்டைக் கண்டுபிடித்து உள்ளது.
இந்தக் கள ஆய்வானது ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள செப்ரோலு என்ற கிராமத்தில் செய்யப் பட்டது.
கி.மு 207 ஆம் ஆண்டில் விஜயன் என்னும் சாதவாகன மன்னனால் வழங்கப்பட்ட இந்த கல்வெட்டில் சமஸ்கிருதம் மற்றும் பிராமி எழுத்துக்கள் உள்ளன.
இதுவரை கி. பி 4 ஆம் நூற்றாண்டில் வெளியிடப்பட்ட இக்ஷவாகு மன்னர் எஹவால சாந்தமுலாவின் நாகார்ஜுன கொண்டா கல்வெட்டானது தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதக் கல்வெட்டாக கருதப்பட்டது.
இந்தக் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பானது ‘சப்தமாத்ரிகா’ என்ற வழிபாடு இருந்ததற்கான ஒரு பழமையான கல்வெட்டுச் சான்றாகக் கருதப் படுகின்றது.
சப்தமாத்ரிகா என்பது இந்து மதத்தில் வணங்கப்படும் ஏழு பெண் தெய்வங்களின் குழுவாகும்.