TNPSC Thervupettagam

தெற்குக் கடற்கரை இரயில்வே மண்டலம்

February 12 , 2025 15 days 41 0
  • புதியத் தெற்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தினை உருவாக்கும் ஒரு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை முன்னோட்ட ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்பட உள்ள தெற்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தின் தலைமையகத்திற்கு இந்தியப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்த SCoR மண்டலம் ஆனது இந்திய இரயில்வே நிர்வாகத்தின் 18வது மண்டலமாக இருக்கும்.
  • இதற்கான ஒரு அதிகார வரம்பு ஆனது, கிழக்குக் கடற்கரை இரயில்வே மற்றும் தென்-மத்திய இரயில்வே மண்டலங்களின் சில பகுதிகளிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது.
  • இது தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளுடன் ஆந்திரப் பிரதேசத்தின் குறிப்பிடத்தக்கப் பகுதியை உள்ளடக்கும்.
  • அமைச்சரவையானது வால்டேர் இரயில்வே பிரிவையும் (முன்னர் கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தின் கீழ் இருந்தது) இரண்டு பகுதிகளாகப் பிரித்தது.
  • அரசாங்கம் ஆனது, அதன் காலனித்துவ காலப் பெயரை குறிப்பிட்டுக் காட்டி, முதல் பிரிவினை விசாகப்பட்டினம் இரயில்வே பிரிவு என மறுபெயரிட்டு அதனைப் புதிய மண்டலத்தின் கீழ் சேர்த்துள்ளது.
  • மற்றொரு பிரிவானது, ஒடிசாவின் இராயகடாவில் ஒரு தலைமையகத்துடன் கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலத்தின் கீழான புதிய பிரிவாக மாற்றப்படும்.
  • கிழக்குக் கடற்கரை இரயில்வே மண்டலமானது (ECoR) 2023-24 ஆம் நிதியாண்டில் சரக்கு ஏற்றுதலில் இந்திய இரயில்வேயின் அனைத்து சாதனைகளையும் முறியடித்து உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 ஆம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வரையில், ECoR ஆனது 250 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றியது என்ற நிலையில் இது 2022-23 ஆம் நிதியாண்டில் பதிவான சாதனையை முறியடித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்