தெலுங்கானா மாநிலத்தின் மலர்த் திருவிழாவான பத்துகம்மா திருவிழாவானது வாரங்கல் மாவட்டத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
ஒன்பது நாள் நிகழ்வான இந்த மலர்த் திருவிழா ஆனது 2019 ஆம் ஆண்டு 29 செப்டம்பர் ஆம் தேதி முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை கொண்டாடப்படும்.
பத்துகம்மா திருவிழாவானது ஷரத் ருது ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கின்றது.
பத்துகம்மா என்பது அடிப்படையில் கூம்பு வடிவ மலர் அடுக்குகள் கொண்ட அமைப்புக்கள் ஆகும். இவை நகரத்தின் தெரு மூலைகளிலும் கோயில்களிலும் வைத்து கொண்டாடப்படுகின்றன.
இந்தத் திருவிழாவானது தெலுங்கானா மக்களின் கலாச்சாரம் மற்றும் அடையாளத்தை பிரதிபலிக்கிறது. மேலும் இது மஹா கௌரியின் வழிபாட்டை உள்ளடக்கியது.