ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி அன்று மணிப்பூரில் தேசபக்தர்கள் தினமானது அனுசரிக்கப் படுகிறது.
1891 ஆம் ஆண்டின் ஆங்கிலோ-மணிப்பூரி போரை நினைவு கூரும் வகையில் இது அனுசரிக்கப் படுகிறது. இந்தப் போரின் போது அந்த மாநிலத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டி பலர் தமது உயிரைத் தியாகம் செய்தனர்.