தேசிய அத்தியாவசிய நோயறிதல் பட்டியலின் (NEDL) ஒரு திருத்தப்பட்டப் பதிப்பினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ICMR) முன்மொழிந்துள்ளது.
நாட்டில் உள்ள பல்வேறு நிலையிலான சுகாதார மையங்களில் கிடைக்க வேண்டிய குறைந்தபட்சச் சோதனைகளின் எண்ணிக்கையை இது கணக்கிடுகிறது.
இத்திருத்தப்பட்ட பதிப்பின் படி, நீரிழிவு நோய், மலேரியா, காசநோய், எச்.ஐ.வி மற்றும் சிபிலிஸ் உள்ளிட்ட ஒன்பது வகையான நோயறிதல் சோதனைகள் ஆனது கிராம அளவிலான சுகாதாரக் கட்டமைப்புகளில் உள்ள சுகாதார மையங்களில் கிடைக்கச் செய்யப்பட வேண்டும்.
நோயறிதல்களைச் சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் ஓர் அத்தியாவசிய அங்கமாக மாற்றுவதற்காக ICMR ஆனது 2019 ஆம் ஆண்டில் முதல் NEDL பட்டியலை வெளியிட்டது.