TNPSC Thervupettagam

தேசிய அறிவியல் தினம் – பிப்ரவரி 28

February 28 , 2019 2039 days 622 0
  • அறிவியல் துறையில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி. ராமனின் பங்களிப்பினை அங்கீகரித்திடுவதற்காக ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 1928 ஆம் ஆண்டு இத்தினத்தில் மிகப் புகழ்வாய்ந்த இந்திய அறிவியலாளர் சி.வி. ராமன் “ராமன் விளைவு” என்பதைக் கண்டுபிடித்தார்.
  • 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி முதல்முறையாக தேசிய அறிவியல் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இவ்வருடத்திற்கான தேசிய அறிவியல் தினத்தின் கருத்துரு, “மக்களுக்காக அறிவியல் மற்றும் அறிவியலுக்காக மக்கள்” என்பதாகும்.
  • கடந்த வருடத்தின் கருத்துரு, “நீடித்த எதிர்காலத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்