ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களின் அவலநிலையினைப் பற்றியும் அவர்களின் உரிமைகளை மேம்படுத்தி அதனைப் பாதுகாப்பதனைப் பற்றியும் ஒரு விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் செய்வதே இத்தினத்தின் நோக்கமாகும்.
ஏற்கனவே ஜனவரி மாதம் முழுவதுமே தேசிய அடிமைத்தனம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு மாதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2007 ஆம் ஆண்டில், ஜனவரி 11 ஆம் தேதியினை தேசிய கடத்தல் விழிப்புணர்வாக நிறுவுவதற்கான ஒரு தீர்மனத்திற்கு அமெரிக்கப் பாராளுமன்ற மேலவை ஒப்புதல் வழங்கியது.
2010 ஆம் ஆண்டில் அதிபர் ஒபாமா அவர்கள், ஜனவரி மாதம் முழுவதும் தேசிய அடிமைத்தனம் மற்றும் ஆள்கடத்தல் தடுப்பு மாதமாக அனுசரிக்கப்படும் எனக் கூறி இருந்தார்.