இந்தியாவில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் தேசிய இளையோர் தினம் அனுசரிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் விவேகானந்தரின் வாழ்க்கை, கருத்துகள் மற்றும் தத்துவங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்கும், ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்வதே இந்த தினத்தின் ஒரு முக்கிய நோக்கமாகும்.
2022 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரின் 159வது பிறந்த நாளாகும். (12 ஜனவரி 1863).
இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “It’s all in the mind” என்பதாகும்.
இந்த தினத்தை அனுசரிப்பதற்கான முடிவு 1984 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப் பட்டது.
இத்தினமானது முதன்முதலில் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 12 அன்று அனுசரிக்கப்பட்டது.