2001 ஆம் ஆண்டு இதே நாளில்தான், எரிசக்தி செயல்திறன் ஆணையரகத்தினால் (BEE) எரிசக்தி பாதுகாப்புச் சட்டமானது செயல்படுத்தப்பட்டது.
ஆற்றலின் முக்கியத்துவம் மற்றும் குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த ஒரு விழிப்புணர்வை பரப்புவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
எரிசக்தி செயல்திறன் ஆணையரகத்தின் மாபெரும் இயக்கத்தின் கீழ் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 09 முதல் 14 ஆம் தேதி வரை எரிசக்தி பாதுகாப்பு வாரத்தை மின்சார அமைச்சகம் கொண்டாடி வருகிறது.