இது 1927 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று இந்தியாவில் முதன்முறையாக வானொலி ஒலிபரப்பு செய்யப்பட்டதை அனுசரிப்பதற்காகக் கொண்டாடப் படுகின்றது.
இது பம்பாய் நிலையத்திலிருந்து ஒலிபரப்பப் பட்டது.
இது அந்தக் காலகட்டத்தில் இந்திய ஒலிபரப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் தனியார் நிறுவனத்தினால் நிர்வகிக்க ப்பட்டது.
1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அன்று இந்திய அரசு இதன் ஒலிபரப்பை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, இந்திய அரசு ஒலிபரப்புச் சேவை (ISBS - Indian State Broadcasting Service) என்று அதற்கு மறுபெயரிட்டது.
ISBS ஆனது 1936 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் அகில இந்திய வானொலி என்று உருமாறியது.