இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11 ஆம் தேதியன்று இந்தத் தினமானது கொண்டாடப்படுகிறது.
2022 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘பாடத் திட்டத்தினை மாற்றுதல், கல்வியை மாற்றுதல்’ என்பதாகும்.
அவர் ஒரு அறிஞர், கல்வியாளர் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார் என்பதோடு, அவர் சுதந்திர இந்தியாவின் கல்வி முறையின் மேம்பாட்டில் ஒரு முக்கியப் பங்கையும் வகித்தவர் ஆவார்.
இவருக்கு 1992 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவரது மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.
இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய அறிவியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் கட்டிடக்கலை மற்றும் கட்டிட வரைபடமாக்கல் கல்லூரி ஆகியவற்றை நிறுவுவதில் இவரது கருத்தாக்கமே காரணக் கர்த்தாவாகும்.
தேசிய கல்வி தின கொண்டாட்டம் ஆனது முதல் முறையாக 2008 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் தேதியன்று அப்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.