TNPSC Thervupettagam

தேசிய குடற்புழு நீக்க தினம் - பிப்ரவரி 10

February 12 , 2020 1690 days 650 0
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10 ஆகிய தேதிகளில் இரண்டு முறை தேசிய குடற்புழு நீக்க தினமானது அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்நிகழ்ச்சியானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தால் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய சுகாதாரத் திட்டமானது இந்த தினத்தைக் கடைபிடிக்கும் நிறுவனமாகும்.
  • அனைத்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே ஒட்டுண்ணி குடல் புழுக்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் மண்ணின் மூலம் பரவும் குடற்புழுநோய்களின் (Soil Transmitted Helminths - STH) பாதிப்பைக் குறைப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இந்தப் புழுக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் மக்களின் மலத்திலிருந்து முக்கியமாகப் பரவுகின்றன.
  • இந்தத் தினத்தின் போது, அல்பெண்டசோல் என்ற குடற்புழு நீக்க மாத்திரையானது குழந்தைகளுக்கு வழங்கப் படுகின்றது.
  • இந்த நிகழ்வானது 2015 ஆம் ஆண்டு முதல் ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற அளவில் (இரண்டு முறை மாத்திரை வழங்குதல்) அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்