நீதிபதி அர்ஜான் குமார் சிக்ரியை தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் (National Legal Services Authority-NALSA) செயல் தலைவராக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.
இந்த NALSA ஆனது சட்ட சேவைகள் ஆணையச் சட்டம் 1987-ன் கீழ் அமைக்கப்பட்டது.
சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு இலவச சட்ட சேவைகளை வழங்குவதற்காகவும் சச்சரவுகளைத் தீர்ப்பதற்காக லோக் அதாலத்தை அமைப்பதற்காகவும் இது நிறுவப்பட்டது.
இந்தியாவின் தலைமை நீதிபதி இதன் ஆதரவுத் தலைவராகவும் உச்சநீதி மன்றத்தின் மூத்த நீதிபதி இந்த ஆணையத்தின் நிர்வாகத் தலைவராகவும் இருப்பர்.