TNPSC Thervupettagam

தேசிய தடுப்பூசி தினம்

March 19 , 2019 2020 days 3249 0
  • 2019 ஆம் ஆண்டு மார்ச் 10 அன்று இந்தியா தேசிய தடுப்பூசி தினத்தை அனுசரித்தது. இத்தினமானது தேசிய நோய்த் தடுப்பு தினம் (National Immunization Day - NID) என்றும் அழைக்கப்படுகிறது.
  • தேசிய தடுப்பூசி தினத்தின் கடைபிடிப்பானது உலகிலிருந்து போலியோ நோயை ஒழித்தலுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் இத்தினத்தில், பத்து இலட்சம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறது.
பின்புலம்
  • போலியோ நோய் தடுப்புத் திட்டம் தொடங்கப்படுவதைக் குறிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தேசிய நோய்த் தடுப்பு தினத்தை இந்தியா அனுசரிக்கிறது.
  • தொடக்கத்தில், இந்தியா ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று தேசிய தடுப்பூசி தினத்தை அனுசரித்தது.
  • தேசிய நோய்த் தடுப்பு தினமானது 1995 ஆம் ஆண்டு மார்ச் 16 அன்று முதன்முதலாக வாய் வழியாக நோய்த் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட போது முதன்முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.
  • இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று போலியோ நோய் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்