June 4 , 2019
1882 days
746
- ஓய்வு பெற்ற இந்திய காவல் பணி அதிகாரியான அஜித் தோவலை இந்திய அரசானது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மீண்டும் நியமித்துள்ளது.
- இவருக்கு காபினெட் அமைச்சருக்கு நிகரான தகுதி வழங்கப்பட்டுள்ளது.
- முன்னுரிமை வரிசை அட்டவணையில் அமைச்சருக்கு நிகரான தகுதி நிலையைப் பெற்ற முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இவர் உருவெடுத்துள்ளார்.
- இவரின் முந்தைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பணிக் காலத்தில் இவருக்கு இணை அமைச்சர் நிலைக்கு நிகரான நிலை வழங்கப்பட்டிருந்தது.
- இந்த தேசிய ஆலோசகர் பதவியானது 1998 ஆம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்த போது உருவாக்கப்பட்டதாகும்.
- இந்திய வெளியறவுப் பணி அதிகாரியான பிரஜேஷ் மிஸ்ரா இந்தியாவின் முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.
- 1968 ஆண்டின் IPS அதிகாரியான அஜித் தோவல் உளவுத் துறையின் இயக்குநராக 2005 ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
Post Views:
746