TNPSC Thervupettagam

தேசிய பாதுகாவல் படையின் 33-வது நிறுவு தினம்

October 19 , 2017 2464 days 639 0
  • தேசிய பாதுகாவல் படையின் (NSG – National Security Guards) 33-வது நிறுவு தினம் அக்டோபர் 26 அன்று ஹரியானாவின் மனோசரில் கொண்டாடப்பட்டது.
  • உள்நாட்டு கலவரங்களுக்கு எதிராக நாட்டை பாதுகாக்கும் நோக்கோடு பயங்கரவாதிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதற்காக ஆப்ரேஷன் புளூ ஸ்டார் மற்றும் இந்திரா காந்தியின் படுகொலைக்கு அடுத்து 1984ல் இந்த படை உருவாக்கப்பட்டது.
  • கருப்பு நிற பூனையை சீருடையில் இலச்சினையாக கொண்டதாலும், கரும்பூனையை போல கருப்பு நிற உடை அணிவதாலும் பொதுவாக NSG படையினர் கருப்பு பூனைகள் என்றழைக்கப்படுவர்.
  • NSG ஓர் பலதரப்பட்ட பணிப்பொறுப்புகளை கொண்ட சிறப்பு பயிற்சியும், மிகுந்த திறமையையும், உந்துதல் உடைய படையாகும்.
  • பதன்கோட் தாக்குதல், அக்சர்தம் கையகப்படுத்துதல், மும்பை தாக்குதல் போன்றவற்றில் NSGன் பங்களிப்பு என்றும் நினைவு கூறத்தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்