TNPSC Thervupettagam

தேசிய மக்கள் பதிவேடு இறுதிவரைவு- அஸ்ஸாம்

August 4 , 2018 2177 days 654 0
  • அஸ்ஸாமின் தேசிய மக்கள் பதிவேட்டின் இறுதி வரைவை அஸ்ஸாம் மாநில அரசு வெளியிட்டுள்ளது.
  • இவ்வரைவின்படி, மொத்தமுள்ள 3.29 கோடி நபர்களில்9 கோடி மக்கள் தேசிய மக்கள் பதிவேட்டில் (National Register of Citizens) இடம் பெறுவதற்கு தகுதியுள்ளவர்கள் ஆவர்.
  • இவ்வரைவில் இடம்பெறாத 40.07 லட்சம் மக்கள் ‘சட்ட விரோதமாக குடி பெயர்ந்தவர்கள்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
  • 1951க்குப் பிறகு தேசிய மக்கள் பதிவேட்டை திருத்தும் முதல் மாநிலம் அஸ்ஸாம் ஆகும். இத்திருத்தமானது உண்மையான இந்திய மக்களின் பெயர்களை பட்டியலில் இணைப்பதற்காக மார்ச் 24, 1971 தேதி வரை தகுதிநிலையாகக் கொண்டு திருத்தப்படுகிறது.
  • முதலாவது தேசிய மக்கள் பதிவேடானது 1.9 கோடி மக்களின் பெயர்களுடன் இந்த வருடம் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1க்கு இடையிலான இரவில் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்