தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கான உலகளாவியக் கூட்டணி
May 31 , 2023 419 days 228 0
உலகில் ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணி (GANHRI) ஆனது இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC-இந்தியா) அங்கீகார வழங்கீட்டினை ஒத்தி வைத்து உள்ளது.
ஏழு மனித உரிமைக் கண்காணிப்பு நிறுவனங்கள்/நிறுவனங்கள் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு வழங்கப்பட உள்ள ‘A’ தரவரிசையை எதிர்த்து GANHRI அமைப்பிற்கு கடிதம் அனுப்பப்பட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு இந்த ஒரு நடவடிக்கையானது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் இந்த கையில் ஒரு ஒத்தி வைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் பாரீஸ் கோட்பாடுகள், 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள் இந்த ஒரு அங்கீகாரத்தினைப் பெறச் செய்வதற்காகப் பூர்த்தி செய்ய வேண்டிய ஆறு சர்வதேச முக்கியமான அளவுருக்களை அவை வழங்கச் செய்கின்றன.
தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவிய கூட்டணியானது அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா-பசிபிக் ஆகிய ஒவ்வொருப் பிராந்தியத்தில் இருந்தும் நான்கு ஆணையங்களுடன் பதினாறு ஆணையங்கள் 'A' தரநிலைப் பெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையங்களைக் கொண்டுள்ளது.
'A' தரநிலை என்ற ஒரு அங்கீகாரமானது, தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் உலகளாவியக் கூட்டணி மற்றும் மனித உரிமைகள் சபை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பிற அமைப்புகளின் பணி மற்றும் முடிவெடுத்தல் என்ற செயல்முறையில் பங்கேற்பதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
1993 ஆம் ஆண்டில் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நிறுவப் பட்டது.
1999 ஆம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையங்களுக்கான அங்கீகாரச் செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இது ‘A’ தரநிலை பெற்றத் தேசிய மனித உரிமைகள் ஆணையமாக அங்கீகரிக்கப்பட்டது.
இது 2006, 2011 மற்றும் 2017 ஆகிய சில ஆண்டுகளில் அதன் அங்கீகார வழங்கீடு ஒத்தி வைக்கப் பட்டதற்குப் பின் மீண்டும் தனது அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டது.