இத்தினத்தை அனுசரிப்பதற்கான ஒரு முன்னெடுப்பானது மும்பையின் மத்திய மீன்வளக் கல்வி மையத்தினால் முதன்முதலில் எடுக்கப் பட்டதாகும்.
ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் மீனின் தூண்டப்பட்ட இனப்பெருக்கத்தின் முதலாவது வெற்றியானது (ஹைப்போபிசேஷன் முறை) டாக்டர் ஹீராலால் சௌத்ரி மற்றும் டாக்டர் K.H. அலிகுன்கி ஆகிய 2 விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக அடையப் பட்டது.
அதனையடுத்து இவர்கள் 3 முக்கியமான இந்திய மீன் வகைகளில் (கட்லா, ரோகு, மிரிகல் இன மீன்கள்) இந்தச் செயல்முறையை 1957 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி மேற்கொண்டனர்.
டாக்டர் H.L. சௌத்ரி மற்றும் டாக்டர் K.H. அலிகுன்கி ஆகியோரின் பங்களிப்பை நினைவு கூறும் வகையில் ஜூலை 10 ஆம் தேதியானது இந்தியாவில் தேசிய மீன் விவசாயிகள் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
உலகின் 2வது மிகப்பெரிய மீன்வளர்ப்பு உற்பத்தியாளர் (Aquaculture Producer) நாடு இந்தியா ஆகும்.
மேலும், உலகில் மூன்றாவது மிகப்பெரிய மீன் உற்பத்தியாளர் (Fish producing) நாடு இந்தியா ஆகும்.
இந்தத் தரவானது ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் “GLOBEFISH” என்ற அமைப்பால் வெளியிடப்பட்டதாகும்.