இந்திய அரசானது, முக்கியக் கனிமத் துறையில் தன்னிறைவிற்கான ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்காக என்று 2025 ஆம் ஆண்டில் தேசிய முக்கியக் கனிம திட்டத்தினை (NCMM) அறிமுகப்படுத்தியுள்ளது.
இது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மூலங்களிலிருந்து கனிமங்கள் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் இந்தியாவின் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (GSI) ஆனது 2024-25 ஆம் ஆண்டு முதல் 2030-31 ஆம் ஆண்டு வரை 1,200 ஆய்வுத் திட்டங்களை மேற்கொள்ளும் பணியை மேற்கொண்டுள்ளது.