அரசியல் செயல்பாட்டில் அதிக இளம் வாக்காளர்களை பங்கேற்பதற்கு ஊக்குவிக்கச் செய்வதற்காக இந்தியாவில் இத்தினமானது அனுசரிக்கப்படுகிறது.
இந்தியத் தேர்தல் ஆணையமானது இந்த ஆண்டு 12வது தேசிய வாக்காளர் தினத்தைக் கொண்டாடுகிறது.
இந்த ஆண்டின் இந்தத் தினத்திற்கான கருத்துரு, ‘தேர்தல்களை உள்ளார்ந்ததாகவும், அணுகக் கூடியதாகவும், பங்கேற்பு மிக்கதாகவும் மாற்றுதல்’ (Making Elections Inclusive, Accessible and Participative) என்பதாகும்.
2011 ஆம் ஆண்டு முதல், இந்தியத் தேர்தல் ஆணையம் (ஜனவரி 25, 1950) நிறுவப்பட்ட தினத்தைக் குறிக்கும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப் படுகிறது.