தேசியக் கடல்வழி தேடுதல் மற்றும் மீட்புக்கான விருது
July 4 , 2018 2238 days 592 0
மஹாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் மிலன் சங்கர் தாரே இவ்வாண்டுக்கான தேசியக் கடல்வழி தேடுதல் மற்றும் மீட்புக்கான விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மே 2018 ல் சிவ்னேரி என்று பெயரிடப்பட்ட மீனவப் படகு மூழ்கும் போது அதில் இருந்த 12 நபர்களை இவர் காப்பாற்றினார்.
தேசியக் கடல்வழி தேடுதல் மற்றும் மீட்புக்கான விருது தேசியக் கடல்வழி தேடுதல் மற்றும் மீட்புக் குழுவால் நிறுவப்பட்டது.