ஆம் ஆத்மி கட்சியானது, தேசியக் கட்சிகள் என்ற குழுவில் சேர உள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் 2012 ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சியை (AAP) தொடங்கினார்.
ஒரு தேசியக் கட்சி என்பது குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் இரண்டு சதவீத மக்களவைத் தொகுதிகளில், அதாவது 11 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆம் ஆத்மி கட்சியின் உறுப்பினர்கள் எவரும் மக்களவை உறுப்பினர்களாக இடம் பெற வில்லை.
இதற்கான மற்றொரு நிபந்தனை என்னவென்றால், அந்தக் கட்சியானது நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தினைப் பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், இக்கட்சி டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பெரிய ஆதரவுடன் அரசினை அமைத்துள்ளது.
கோவா மாநிலத்தில், இந்தக் கட்சி ஆறு சதவீத வாக்குகளைப் பெறுதல் / இரண்டு இடங்களில் வெற்றி பெறுதல் என்ற நிபந்தனையைப் பூர்த்தி செய்கிறது.
தற்போது எட்டு தேசியக் கட்சிகள் மட்டுமே இந்திய தேர்தல் ஆணையத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
அவை பா.ஜ.க., காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சி, இந்தியப் பொதுவுடைமை கட்சி, இந்தியப் பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்), மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியனவாகும்.
இந்த அந்தஸ்தின் காரணமாக, ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் சின்னமானது (துடைப்பம்) இந்தியா முழுவதும் மாற்றப்படாமல் இருக்கும்.
தேசியக் கட்சிகள் ஆனது பொதுத் தேர்தல்களின் போது, ஆகாசவாணி மற்றும் தூர்தர்ஷன் ஆகியவற்றில் ஒலிபரப்பு மற்றும் ஒளிபரப்பு அலைவரிசைகளைப் பெறுகின்றன.
அது தனது கட்சியின் தலைமை அலுவலகத்தினைக் கட்டமைப்பதற்காக வேண்டி அரசு நிலத்தைப் பெறும்.
அங்கீகரிக்கப்பட்ட ‘மாநில’ மற்றும் ‘தேசிய’ கட்சிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய ஒரே ஒரு முன்மொழிபவர் மட்டுமே தேவை.