TNPSC Thervupettagam

தேசியக் கால்நடைத் திட்ட விரிவாக்கம்

February 26 , 2024 145 days 198 0
  • கால்நடைத் துறையை மேம்படுத்துவதற்காக கூடுதல் செயல்பாடுகளை உள்ளடக்கிய தேசியக் கால்நடைத் திட்டத்தில் (NLM) மேலும் புதிய மாற்றங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தனிநபர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPO), சுய உதவிக் குழுக்கள் (SHG), கூட்டுப் பொறுப்புக் குழுக்கள் (JLG), உழவர் கூட்டுறவு அமைப்புகள் (FCOs) மற்றும் 8 வது பிரிவில் சேர்க்கப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை குதிரைகள், கழுதைகள், கோவேறுக் கழுதைகள் மற்றும் ஒட்டகங்கள் தொடர்பான பல தொழில்முனைவு முயற்சிகளை நிறுவுவதற்காக தற்போது 50 லட்சம் ரூபாய் வரையில் 50% மூலதன மானியத்தினைப் பெறும்.
  • குதிரை, கழுதை மற்றும் ஒட்டக இனங்களின் வளங்காப்பிற்காக மாநில அரசுகளுக்கு நிதியுதவி அளிக்கப்படும்.
  • குதிரைகள், கழுதைகள் மற்றும் ஒட்டகங்களுக்கான பிரத்தியேக விந்து சேமிப்பு நிலையங்கள் மற்றும் உட்கரு பெருக்கப் பண்ணைகள் அமைப்பதற்காக மத்திய அரசானது 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்க உள்ளது.
  • தனியார் நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள், FPO, FCO, JLG, உழவர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் தீவன விதைகளைப் பதப்படுத்தும் உள் கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள 8வது பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்கள் 50% அளவு மூலதன மானியத்தைப் பெறும்.
  • விவசாயிகளுக்கான காப்பீட்டில் பயனாளியின் பங்கை 15% என்ற அளவாக குறைத்து, கால்நடைக் காப்பீட்டுத் திட்டம் நெறிமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
  • தற்போதைய விகிதங்கள் 20%, 30%, 40% மற்றும் 50% ஆகும்.
  • மீதமுள்ள காப்பீட்டுத் தொகையானது அனைத்து மாநிலங்களுக்கும் 60:40 என்ற விகிதத்திலும், ஒன்றியப் பிரதேசங்களில் 90:10 என்ற விகிதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ளும்.
  • மாடு, செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கு காப்பீடு பெறுவதற்கு என்று தகுதியாக நிர்ணயிக்கப் பட்ட கால்நடை எண்ணிக்கையானது 10 கால்நடைகளாக உயர்த்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்