TNPSC Thervupettagam

தேசியக் குடிமைப் பணிகள் தினம் – ஏப்ரல் 21

April 21 , 2019 1988 days 1078 0
  • ஏப்ரல் 21 அன்று இந்தியா முழுவதும் குடிமைப் பணிகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது.
  • 2006 ஆம் ஆண்டில் முதலாவது குடிமைப் பணிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நாளில் குடிமைப் பணியாளர்கள் பொது மக்களின் தேவைகளுக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். இவர்கள் பொதுச் சேவைகளுக்கு தங்களுடைய பொறுப்புகளை இந்த நாளில் புதுப்பித்துக் கொள்கின்றனர்.
  • இந்த நாளானது 1947 ஆம் ஆண்டில் புது தில்லியில் உள்ள மெட்கேப் இல்லத்தில் முதலாவது பிரிவைச் சேர்ந்த குடிமைப் பணி பயிற்சி அதிகாரிகளிடையே சர்தார் வல்லபாய் படேல் உரையாற்றிய நாளுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.

  • அவருடைய புகழ்பெற்ற உரையில் குடிமைப் பணியாளர்களை “இந்தியாவின் எஃகுச் சட்டகம்” என்று குறிப்பிட்டார்.
  • மக்களவைத் தேர்தல் காரணமாக குடிமைப் பணிகள் தினமானது இந்த ஆண்டு அனுசரிக்கப்படவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்