இது பேராசிரியர் PC மஹலநோபிஸின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப் படுகின்றது.
உலக அங்கீகாரத்தைப் பெற்ற முதலாவது புள்ளியியல் அறிஞர் இவராவார். இவர் இந்தியப் புள்ளியியலின் தந்தை என்று அழைக்கப்படுகின்றார்.
இவர் இந்தியப் புள்ளியியல் அமைப்பின் தலைமைக் கட்டமைப்பாளராகக் குறிப்பிடப் படுகின்றார்.
இவர் 1931 ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை ஏற்படுத்தினார்.
இவர் சுதந்திர இந்தியாவின் முதலாவது திட்டக் குழு ஆணையத்தின் (1951-56) உறுப்பினராகவும் பணியாற்றினார்.
2020 ஆம் ஆண்டிற்கான புள்ளியியல் தினத்தின் கருத்துரு, “நீடித்த வளர்ச்சி இலக்கு – 3 (அனைவருக்கும் அனைத்து வயதிலும் ஆரோக்கியமான வாழ்வு மற்றும் நலனை உறுதி செய்தல்) & நீடித்த வளர்ச்சி இலக்கு – 5 (பாலினச் சமத்துவத்தை உறுதி செய்தல் & பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரமளித்தல்)” என்பதாகும்.