தேசியப் பேரிடர் மீட்புப் படை எழுச்சி ஆண்டு - ஜனவரி 19
January 20 , 2022 950 days 326 0
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் தேதி அன்று நடைமுறைக்கு வந்ததிலிருந்து தேசியப் பேரிடர் மீட்புப் படையானது இந்த நாளைக் கொண்டாடுகிறது.
2022 ஆம் ஆண்டில், தேசியப் பேரிடர் மீட்புப் படையானது அதன் 17வது எழுச்சி ஆண்டைக் கொண்டாடுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 12 தேசியப் பேரிடர் மீட்புப் படையின் படைப் பிரிவுகள் உள்ளன.
மேலும் 13,000 தேசியப்பேரிடர் மீட்புப் படைப் பணியாளர்கள் பாதுகாப்பான நாட்டை உருவாக்க வேண்டி பணி புரிகின்றனர்.
தேசியப் பேரிடர் மீட்புப் படையானது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற ஒரு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கீழ் உள்ள ஒரு இந்திய சிறப்புப் படையாகும்.
பேரிடர் அச்சுறுத்தும் சூழ்நிலைகளில் சிறப்பான மீட்புப் பணிகளை மேற்கொள்ளச் செய்வதற்காக வேண்டி இது உருவாக்கப்பட்டது.