TNPSC Thervupettagam

தேர்தல் புறக்கணிப்பு – நாகாலாந்து

January 31 , 2018 2361 days 743 0
  • நாகாலாந்தில் உள்ள பதினொரு அரசியல் கட்சிகள் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதென்று ஒருமனதாக முடிவு செய்துள்ளன.
  • வருகின்ற பிப்ரவரி 2018-ல் நடைபெற உள்ள தேர்தலில் அக்கட்சிகள் யாருக்கும் வேட்பாளர் வாய்ப்பு கொடுப்பதில்லை என்றும், வேட்புமனு தாக்கல் செய்யப்போவதில்லை என்றும் முடிவு செய்துள்ளன.
  • 70 ஆண்டுகளாக நீடித்து வரும் நாகா கிளர்ச்சிக்கு தேர்தலுக்கு முன்பாக தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காக தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் நாகாலாந்து பழங்குடியின ஹோஹோ மற்றும் குடிமை அமைப்பின் (Nagaland Tribal Hoho and Civil Organisation) முக்கியக் குழு நடத்திய சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • நாகாலாந்தின் பிரிவினைவாத அமைப்பான ஐசக் முய்வாவின் தேசிய நாகலாந்துசோஷலிசக்குழு  (National Socialist Council of Nagalim – Issac Muivah/ NSCN-IM) ஆகஸ்டு 2015-ஆம் ஆண்டில் நாகா கிளர்ச்சிக்கு சுமூகமான முறையில் தீர்வு காண்பதற்கு கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. தற்பொழுது அறிவிக்கப்பட்டிருக்கும் சட்டமன்றத் தேர்தலானது இந்த ஒப்பந்தத்தையும், அதன் நடவடிக்கைகளையும் சீர்குலைக்கும் செயலென்று அவ்வமைப்பு கூறியுள்ளது.
  • NSCN-IM அமைப்பானது அசாம், மணிப்பூர் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலங்களில் நாகா மக்கள் வசிக்கும் பகுதிகளை நாகாலாந்துடன் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.
  • இது அகன்ற நாகாலாந்து (Greater Nagalim) என்றழைக்கப்படுகின்றது.
  • அரசு விதிகளின்படி திட்டமிட்ட தேர்தலை நிறுத்துவதற்கு அரசியல் அமைப்பில் திருத்தம் கொண்டுவர வேண்டும் அல்லது அசாதாரண சூழல் ஏற்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்