காந்தி நகரில் உள்ள இந்திய பொதுச் சுகாதார நிறுவனமானது (IIPHG - Indian Institute of Public Health Gandhinagar) “தேர்வில் வெற்றி பெறு, மாவீரனாக இரு” என்ற ஒரு கைபேசிச் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது குஜராத் மாநில அரசின் சுகாதாரம் & குடும்ப நலத் துறை மற்றும் தேசிய மன நலத் திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் செயலியை உருவாக்கியுள்ளது.
இந்தச் செயலியானது விழிப்புணர்வை உருவாக்கவும் அதேபோல் மாணவர்களின் பலவீனமான பகுதிகள் குறித்துப் பகுப்பாய்வு செய்யவும் அவர்களுக்கு உதவி வழங்குவதன் மூலம் தேர்வு குறித்த மன அழுத்தத்திலிருந்து விடுபடவும் உதவுகிறது.
தற்பொழுது இந்தச் செயலியானது ஆங்கில மொழியில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வருங்காலங்களில் இந்தி, குஜராத்தி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளும் இந்தச் செயலியில் இணைக்கப்படவிருக்கின்றன.