மத்தியப் பிரதேசத்தில் ஆயுஷ் மருத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் அதனை வேலை வாய்ப்புடன் இணைப்பதற்கும் வேண்டி அம்மாநில அரசானது ‘தேவரண்யா’ என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மாநிலத்திலுள்ள பழங்குடியினர் வாழ் பகுதிகளில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதற்காக வேண்டி இத்திட்டமானது தொடங்கப் பட்டு உள்ளது.
ஆயுஷ் மருந்துகளின் உற்பத்திக்கான முழுமையான மதிப்புத் தொடரானது தேவராண்யா திட்டம் மூலம் உருவாக்கப்படும்.
சுய உதவிக் குழுக்களும் இப்பணியில் முக்கியப் பங்கு வகிக்க உள்ளன.