தேவேந்திர ஜஜாரியா பத்ம பூஷன் விருதைப் பெற்ற முதல் பாரா (மாற்றுத் திறனாளி) தடகள வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இவர் 2004 ஆம் ஆண்டில் ஏதென்ஸ் நகரில் நடந்த போட்டி மற்றும் 2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் நடந்த போட்டி போன்றவைகளில் பெற்ற தங்கப் பதக்கம் மற்றும் 2020 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கம் உட்பட பல பாராலிம்பிக் (மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக்) பதக்கங்களை வென்றுள்ளார்.
அவனி லேகாரா (மாற்றுத் திறனாளி துப்பாக்கிச் சுடும் வீரர்) இந்த விளையாட்டுப் பிரிவில் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற மற்றொரு வீரராவார்.
ஒரே விளையாட்டுப் போட்டியில் இரண்டு பாராலிம்பிக் பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பெண்மணியும், பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணியும் இவரே ஆவார்.