TNPSC Thervupettagam

தொடக்கப் பொதுப் பங்கு வெளியீடு – பேடிஎம்

June 7 , 2021 1141 days 534 0
  • பேடிஎம் நிறுவனமானது இந்த ஆண்டின் பிற்பகுதியில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொடக்கப் பொதுப் பங்கு வெளியீட்டினை கொண்டு வர உள்ளதாக அறிவித்துள்ளது.
  • தனது வளர்ச்சியைப் பெருக்குவதற்காக நிதி திரட்ட வேண்டி சில நிறுவனங்கள் தங்களது பங்குகளின் ஒரு பகுதியைப் பங்குச் சந்தையில் விற்பனை செய்யும்.
  • இத்தகைய முறையானது தொடக்கப் பொதுப் பங்கு வழங்கீடு என அழைக்கப் படுகிறது.
  • இதன் காரணமாக பழுப்பு நிறச் சந்தையில் (க்ரே மார்கெட்) பேடிஎம் நிறுவனப் பங்குகளின் விலை  அதிகரித்துள்ளது.
  • க்ரே மார்கெட் என்பது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் வரம்பிற்கு வெளியே செயல்படும் ஒரு முறைசாரா சந்தையாகும்.
  • இங்கு மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளும் நம்பிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப் படும் அதே நேரத்தில் அவை எதிரிணை ஆபத்துகளையும் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்