தொலைபேசி வாயிலான சட்டச் சேவைத் திட்டம் 2.0 என்ற முன்னெடுப்பானது, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதித் துறையினால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் 2வது பதிப்பில், நியாய பந்து பொது மக்களுக்கான சட்டச் சேவைகளுடன் தொலைபேசி வாயிலான சட்டச் சேவைத் திட்டம் 2.0 இணைக்கப் பட்டு உள்ளது.
இது சட்ட உதவிகளை குடிமக்கள் அணுகுவதற்கான வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஒற்றைப் பதிவுச் செயல்முறை மூலம் சட்ட வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பது எண்ணிமக் கல்வியறிவு மற்றும் அதிகாரம் பெற்ற மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான உறுதிப்பாட்டிற்கான ஒரு சான்றாக உள்ளது.
2017 ஆம் ஆண்டு நீதித்துறைத் துறையினால் இத்திட்டம் தொடங்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு சட்டச் சேவை ஆணையங்கள் சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் இலவச சட்ட உதவிப் பெறத் தகுதியுடையவர்களுக்கு இந்த ஆலோசனை இலவசமாக வழங்கப் படும்.