TNPSC Thervupettagam

தொழிற்துறைகளுக்கான ஒற்றைச் சாளர முறையை செயல்படுத்தும் அவசரச் சட்டம்

November 3 , 2017 2449 days 1265 0
  • மாநிலத்தில் முதலீடு செய்யும் திட்டம் கொண்டுள்ள முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி பெறுவதற்கான இணையவழி தகவு வசதியை தமிழக அரசு தொடங்கியது. (அறிமுகப்படுத்தியது.)
  • easybusiness.tn.gov.in என்ற இணையவாயிலை தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இது 11 துறைகளை ஒருங்கிணைத்து 37 சேவைகளை இணையவழியில் அளிக்கும்.
  • இந்த தகவு,
    • விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தல்
    • கட்டணம் செலுத்துதல்
    • அனுமதியளிக்கப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்தல்
    • அனுமதிகளை புதுப்பிப்பது மற்றும் அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 37 விதமான சேவைகளைப் பெறுவது போன்றவற்றிற்குப் பயன்படுகிறது.
  • தமிழக அரசு, வணிகத்தை எளிதாக்கும் அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்தி புதிய சட்ட விதிகளை அறிவித்தது.
  • பல்வேறு அனுமதிகளைப் பெறுவதற்காகவும் வணிக சீர்திருத்த செயல் திட்டத்தின் சட்டங்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் இயற்றவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறையின் பரிந்துரைகளை மாநில அரசு பின்பற்றியுள்ளது.
செயல்படுத்தும் முகமை
  • பெரிய தொழில்துறை நிறுவனங்களை (10 கோடிக்கும் மேலான மூதலீடுகள்) பொறுத்த வரையில் தமிழ்நாடு தொழில்துறை வழிகாட்டல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுச் செயலகமே (TNIGEPB) செயல்படுத்தும் முகமை ஆகும்.
  • சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்துறை பிரிவுகளைப் பொறுத்த வரையில் (10 கோடி வரை உள்ள முதலீடுகள்), தொழில் மற்றும் வர்த்தக மண்டல கூட்டு இயக்குநர் அலுவலகம் சென்னை மாவட்டத்திற்கு செயல்படுத்தும் முகமை ஆகும்.
  • பிற மாவட்டங்களில் மாவட்ட அளவிலான மாவட்ட தொழிற்சாலை மையங்களே (DLC) செயல்படுத்தும் முகமை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்